Thursday, October 30, 2008

டார்வின் தியரியும், விருதும்.

டார்வின் தியரி பற்றி நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம் என்று நான் சொல்கிற வேளையில், "ஆமா, அப்படி ஏதோ படிச்சியிருக்கோம், ஆனா இப்போ ஞாபகத்துல இல்ல" என்று நீங்கள் சொல்வதில் தப்பொன்றும் இல்லை. ஆறாவது படிக்கும் போது, பத்து மார்க் கேள்விக்காக தலைகீழாக படித்து மறந்தவைகளுள் இதுவும் ஒன்று.

டார்வின் தியரி - சில வரிகளில்.
பழமாகட்டும், பறவையாகட்டும், மலராகட்டும், மங்கையாகட்டும், அவை அனைத்திற்க்கும், முந்தாதையர் ஒன்று தான் என்பது தான் டார்வின் தியரி. பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குகிறது. மேலும் படிக்க இங்கே செல்லவும்.

டார்வின் தியரி சரி, டார்வின் விருது என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?. டார்வின் தியரி பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் கூறும்போது, டார்வின் விருது, எதற்க்காக வழங்கப்படுகிறது என்று தெரியுமா?

புதிதாக ஏதேனும் கண்டுப்பிடிப்பவர்களுக்கு அல்ல. மிக முட்டாள்த்தனமாக அல்லது விசித்திரமாக இறந்துப் போகிறவர்களுக்கு. ஆக, டார்வின் விருது பெற முதல் தகுதி - இறந்துப்போவது. இரண்டாவது, முட்டாள்த்தனமாக அல்லது யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு விசித்திரமாக இறப்பது.

இந்த விருதை பெறவேண்டும் என்று யாரும் முயற்சிப்பதில்லை என்பது நல்ல விஷயம் என்றாலும், சிலரது தற்கொலை முயற்சிகளும், இன்ன பிற விஷயங்கள் கேளிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. இவர்களுக்கு டார்வின் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் டார்வின் விருதுக்கு தகுதி வாய்ந்ததா என்று தீர்மானிப்பதற்க்காக, ஒரு தனிக்குழுவும் உள்ளது.

சில நாட்களுக்கு முன்னால், இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நான் இணையதளத்தை நோண்டிய போது சில சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தது. இவர்களுக்கு டார்வின் விருதும் கிடைத்தது. படித்தவைகளுள் ஹாலிவுட் வகையில் யூகிக்கமுடியாத சம்பவம் இதோ.

23-மார்ச்-1994
ரொனால்டு ஓபஸ் என்பவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்று மருத்துவ பரிசோதனை சொல்கிறது. ஆனால் இது தற்கொலை என்று முடிவு செய்து கேஸ் ஃபைலை மூடியது காவல் துறை. நடந்தது என்ன? இதோ...

வாழ்க்கையை வெறுத்த ஓபஸ் தற்கொலை செய்துக்கொள்ள தனது வீட்டின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். கீழே குதிக்கும் போது ஒன்பதாவது மாடியில் இருந்து வந்த துப்பாக்கிக்குண்டு ஓபஸின் தலையை பதம் பார்க்க, தலை சிதறியது. மொட்டை மாடியில் வேலை செய்பவர்கள் தவறி விழுந்தால் காப்பாற்றுவதற்க்காக எட்டாவது மாடியில் கட்டியுள்ள வலையில் ஓபஸ் விழுந்தார். ஆக, தான் நினைத்த படி தற்கொலை செய்யவில்லை.

இது கொலையாக இருக்குமோ என்ற ஐயத்துடன், காவல்துறை ஒன்பதாவது மாடியில் வசிக்கும் தம்பதியரிடம் தன் விசாரணையை தொடர்ந்தது. தம்பதியர் தமக்குள் நடந்த சண்டையில், கணவன் துப்பாக்கியால் மனைவியை சுட, அது தவறி, ஜன்னலின் வழியாக ஓபஸின் தலையை தட்டியது. ஆனால், சட்டப்படி, ஒருவன் 'அ'வை கொலை செய்யும் நோக்கத்தில் 'ஆ'வை தவறுதலாக கொலை செய்தாலும், 'ஆ'வை கொன்றது குற்றமே என்று கூறி, கணவனை கைது செய்ய காவல்துறை முனைந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் தன்னுடைய துப்பாக்கியில் தான் தோட்டாக்களை போடவில்லை என்றும், தனக்கும், தன் மனைவிக்கும், அடிக்கடி சண்டை வருமென்றும், அதனால் வெத்துத் துப்பாக்கியால் தன் மனைவியை மிரட்டுவதும் சகஜம் என்றும் கூறினார்.

இதை மேலும் விசாரித்த போது, துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டது தம்பதியினரின் மகனென்று தெரிய வந்தது. தாய் தன்னுடைய மகனுக்கு பணம் தருவதை நிறுத்தியதில் கோபமடைந்த மகன் தாயை கொலை செய்ய முடிவெடுத்திறுக்கிறான். தன் தந்தைக்கும், தாய்க்கும் அடிக்கடி சண்டை வருவதையும், தன் தந்தை வெத்துத் துப்பாக்கியால், தன் தாயை மிரட்டுவதும் தெரிந்துக்கொண்டு, ஆறு வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பியிருக்கிறான். ஆக இந்த மகன் தான் ஓபஸ் கொலையில் குற்றாவாளி என்று காவல்துறை முடிவெடுத்தது.

திரைக்கதையில் "ட்விஸ்டு" என்பார்களே அது இனி தான். தம்பதியினரின் மகன் தான் ஓபஸ் என்றும், தன் தாயை கொலை செய்ய பல வழிகள் கையாண்டும் வெற்றி பெறவில்லை என்ற வருத்ததில் தற்கொலைக்கு முயற்ச்சித்த போது, தன்னால் தோட்டாக்களை நிறப்பப்பட்ட துப்பாக்கியால் இறந்ததால் இது தற்கொலை என்று கூறி கேஸை க்ளோஸ் செய்தது காவல்துறை.

ஓபஸ்சுக்கு டார்வின் விருது வழங்கியது சரியான முடிவு தானே?

Friday, October 24, 2008

லண்டனில் தீபாவளி

வணக்கம் மக்களே...
இது என்னோட முதல் தமிழ் பதிப்பு. படிச்சிட்டு நல்லா இருந்தா நல்ல இருக்குனு சொல்லுங்க, நல்லா இல்லேனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்க. இல்ல வேனா உண்மையே சொல்லுங்க பரவால. :)

முதல் தமிழ் பதிப்பாச்சே, என்னத்த எழுதறதுனே தெரில, சரி நமக்கு தெரிஞ்ச தீபாவளிய பத்தி எழுதிறலாம்னு ஒரு எண்ணம். தவிர லண்டன்ல இருக்கேனா, அதனால தான் இந்த டாபிக். ஆனா தீபாவளி பத்தி தானா முழு பதிப்பும்? இல்ல, இன்னும் கொஞ்ச கூடவே இருக்கு. முழுசா படிங்க.

நரகாசுரன கொன்னு போட்டாங்கனு சொல்லித்தான தீபாவளிய ஆரம்பச்சானுங்க. ஆனா எனக்கு எங்க வீட்ல வேற மாதிரி தான் சொல்லித்தந்தாங்க. இட்லியும் கோழி கொழம்பும் சாப்டற நாள் தான் தீபாவளினு சொல்லித்தந்தாங்க. அட மொக்கை எல்லாம் ஒன்னியும் இல்லே. உண்மையத்தான் சொல்றே. இதுல விசேஷம் என்னனா, எங்களுக்கு செவ்வாக்கிழமையும், சனிக்கிழமையும், நான்-வெஜ்-ன, ச்சீ ச்சீ அபச்சாரம்னு சொல்ற பழக்கமும் நல்லாவே இருக்கு. அதனால செவ்வாக்கிழம அல்லது சனிக்கிழம வர்ர தீபாவளிய வேற நாள்-ல மாத்தி வெக்கற பழக்கமும் நல்லாவே இருக்கு. இந்த கலாச்சாரத்தோட ஒட்டி நானும் வளந்துட்டேன்.

என்னோட தீபாவளியப்பத்தி சொல்லனும்னா குறைந்தது பதிமூன்றாம் நூற்றாண்டுக்காவது, க்க்க்ம், தசவதாரம் பாத்த எஃபெக்ட்டு. மன்னிச்சிக்கோங்க. என்னோட பதிமூனாம் வயசுக்காவது போகனும். அப்போ பட்டாசு மேல மோகம் போயி கொஞ்சம் எங்க "கலாச்சாரத்தோட"(?) மிக்ஸ் ஆன காலம். அதுக்கு முன்னாடி பட்டாசு எப்டினு கேக்காதீங்க. கிட்டத்தட்ட எல்லா வெடியயும், கைல புடிச்சி கொலுத்தி போட்டிருக்கேன் அப்பாக்கு தெரியாம. சில சமயம் கைலயே வெடிக்கவும் செஞ்சே. ஏன்டா கைலயே வெச்சிக்கிட்டே? தூக்கி போட வேண்டியது தானேங்கறீங்களா? எல்லாம், யோசிச்சா பன்னே? பல பேறு பண்ணாங்க, நானும் பண்ணே. அது சமுதாய பிரச்சன. இங்குட்டு அலச வேண்டாம் :).

சரி டாபிக்குக்கு வருவோம். சின்ன வயசுல இருந்தே எங்களோட "கலாச்சாரத்த" விட்டுக்கொடுக்காம இருந்ததுனால, எனக்கும் என்னோட அக்காவுக்கும் இது கொஞ்சம் போட்டியாவே மாறிடிச்சு. போட்டி விதிகள் ரொம்ப சிம்பிள். ஒரு இட்லிக்கு 10 ரன். போட்டி முடியும் போது யாரு நெறய ரன் எடுத்திருக்காங்களோ அவங்க தான் வின்னர். பரிசு எல்லாம் ஒன்னியும் இல்ல, வேணும்னா எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி சாப்டலாம், ஆனா வயித்துல இடம் இருக்காது. அட எனக்கு சொல்லல. எங்க அக்காக்கு தான் இடம் இருக்காது. எனக்கு அந்த பிரச்சனையும் வந்ததில்ல. நான் "இந்த" போட்டில தோத்து போனதா சரித்திரமும் இருந்ததில்ல.

வயசு எவ்வளவோ அத்தன இட்லிகள உள்ள தள்ளியே ஆகனும் அப்டிங்கரது என்னோட எழுதப்படாத பாலிசியா வெச்சிருந்தேன். அதாவது நான் சொல்றது குறைந்த பட்சம், அப்பர் லிமிட் நான் வெச்சிக்கிட்டதே இல்ல. என்னோட மேக்சிமம் ஸ்கோர் 260 ரன்ஸ். அதாவது 26 இட்லி, சத்தியமா தான். இந்த இமாலய சாதனய(?) நான் நிகழ்த்தும் போது என்னோட வயசு 15. சச்சின் கொஞ்சம் கவனிக்கவும். 260 ரன் அடிச்சும் நான் நாட்-அவுட் தான். ஓவர் தீந்திடிச்சு. அதான் இட்லி அவ்ளோ தான்னு அம்மா சொல்லிட்டாங்க. பாவம் அவங்க, எவ்ளோ தான் பண்ணுவாங்க?

நான் +2 படிக்கும் போது என் நண்பன் ஒருத்தன தீபாவளிக்கு எங்க வீட்டுக்குக் கூப்டலாம்னு இருந்தேன். அவன் முஸ்லிம்ங்கறதனால அவங்க தீபாவளி கொண்டாடல. பட்டாசு வெடிக்கலையானு கேக்றீங்களா? அட பட்டாசு எல்லாம் வெடிச்சானுங்க. நான் சொல்றது எங்களோட சம்பிரதாயப்படி கொண்டாடலனு. அதனால எங்க வீட்டுக்குக் கூப்டேன். நான் பல பேரு மூனு இட்லி நாலு இட்லியெல்லாம் சாப்ட்டு ஏப்பம் விடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இவன் ஒரு வேல அந்த சாதிப் பயலா இருந்தா என்ன பண்றது? அவன் நாலு சாப்டு, நான் இறுபத்தி அஞ்சி சாப்டா நல்லாவா இருக்கும்னு ஒரே பீலிங்கு. அட நான் ஃபீல் பண்ணல. எல்லம் எங்க வீட்ல தான். கண்ணு பட்டிரும்னு பயம். சரி என்ன பண்ணலாம்னு அவன கூப்டரதுக்கு முன்னாடி 10 சாப்ட்டு, அவன கூப்டேன். நெனச்ச மாதிரி அவன் நாலு தாங்க சாப்டான். நான் என்னோட பாலிசி(?) அடிவாங்கக் கூடாதுனு 9 சாப்ட்டு, 190 ரன்ஸ்சோட முடிச்சிகிட்டேன். அப்போ என்னோட வயசு 17.

சில சமயம் நான் தான் இப்படியோனு நெனச்சதுண்டு. அப்பொ தான் ஒரு தடவ, எங்க கஸின் பிரதர்ஸ மீட் பண்ணெ. அட அவனுங்களும் என்ன மாதிரி தான் இருந்தானுங்க. சபாஷ் சரியான போட்டினு பல முறை, மோதி இருக்கோம். ம்ம்ம் வீட்ல இல்ல. வீட்ல ஆளுக்கு 25னு நாலு பேறு சாப்டா 100 இட்லிக்கு தகப்பன்ஸ் எல்லாம் எக்ஸ்ட்ரா டைம் வர்க் பண்ணவேண்டி இருக்கும். அதனால அதுக்கு தனியா நாங்க தேதி ஃபிக்ஸ் பண்ணுவோம். எங்க குடும்பங்கள்ல எல்லாம் கல்யாணம் முடிஞ்சி "மறு வீடு" அப்டீனு ஒரு ஃபங்க்ஷன் வெப்பானுங்க. அதாவது பொண்ண பய்யன் வீடுக்கு அனுப்ர ஃபங்க்ஷன். அப்போ மெனுல நான்-வெஜ் தான் அதிகமா இருக்கும். எப்பொ எல்லாம் இது நடக்குதோ, அப்பொ எல்லாம், match கண்டிப்பா நடக்கும். அப்பொ கூட சரித்திரத்த மாத்த முடியலேனா பாத்துக்கோங்க என்னோட திறமய.

நான் காலேஜ் முடிச்சிட்டு ஒரு நல்ல வேல கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு வருஷம் ஏதோ ஒரு சின்ன கம்பேனில தான் வேலயும் பாத்தேன். அப்பொ தான் ஒரு ஞாய்த்துக்கிழம இப்பொ நான் வேல பாக்ற கம்பேனில இருந்து இன்டர்வியூக்கு கூப்டானுங்க. வேல கெடச்சே ஆவனும்னு எங்க வீட்ல எல்லோரும் மனசுக்குள்ளேயே பிரார்த்தன பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நானும் தான். காலைல 8 மணிக்கு இன்டர்வியூக்கு மீனாட்ச்சி காலேஜ்க்கு போகணும். அந்த காலேஜ் இருக்றது கோடம்பாக்கம், நான் இருக்றது அம்பத்தூர். வண்டி வேற இல்ல. பஸ்ல தான் போகனும். ஓரே டென்ஷன். அட டென்ஷன் எனக்கு இல்ல, எங்க வீட்ல இருக்றவங்களுக்கு தான். அன்னைக்கு என்னோட ஸ்கோர் 145. ஒரு பாதி இட்லி எக்ஸ்ட்ரவா சாப்டேன். தட்டுல கொஞ்சம் கொழம்பு இருந்ததுனால அந்த 5 ரன்.

அப்றோம், என்னோட வயசு பெருகப்பெருக, ஸ்ட்ரைக் ரேட் கொறஞ்சுது. இப்பொ புறியுது சச்சின்க்கு என்ன ஆச்சுனு. ஆனாலும் 100 ரன் குறையாம பல வருஷங்களா அடிச்சிக்கிட்டு தான் இருந்தேன்.

இது வரைக்கும், ஃபளாஷ் பேக். இனி வருவது இன்னய பத்தி.

இபோ சிச்சுவேஷன் என்னானு பாத்தா...
1) செவ்வாக் கிழமையா தீபாவளி வருது. [தீபாவளி வட இந்தியால செவ்வாக்கிழமயாவும், தென் இந்தியால திங்கக்கிழமயாவும் வருது. சுவாரஸ்யமும், ஃப்ளோவையும் மனசில வெச்சிக்கிட்டு செவ்வாக்கிழமய எடுத்துக்கிட்டேன்]
2) நான் இப்போ தனியா லண்டன்ல இருக்கேன்.
3) நான் வேற "அதே" கலாச்சாரத்தோட வளந்து தொலச்சிடேன்

இப்படி இருக்கு சிச்சுவேஷன். ஆன அதுக்காக பழக்கத்த மாத்திக்க முடியுமா? உம்மாச்சி என்ன லீவ் போட்டா போயிருக்காங்க? கண்ண குத்தி பள்ளாங்குளி ஆடிட மாட்டாங்க? சம்பிரதாயப்படி, இட்லியும் கோழி கொழம்பயும் உள்ள தள்ளியே ஆகனும்.

அதனால செவ்வாக்கிழமையா வர்ர தீபாவளிய ஞாய்த்துக்கிழமைக்கு மாத்திட்டேன். அடுத்ததா, frozen இட்லியும், pack பண்ணின கோழியயும் வாங்கி, அத சமச்சி ஓரளவுக்கு தீபாவளி சீன்ன க்ரீயேட் பண்ணிட்டேன். இப்பொ எனக்கு முன்னாடி இட்லியும் இருக்கு, கோழி கொழம்பும் இருக்கு. ஆனா எங்க வீட்ல பண்ற மாதிரி ஆவி பறக்ற மல்லிப்பூ இட்லியும் இல்ல, கொழம்ப பாத்த உடனெ வாயில எச்சிலும் ஊரல. இது வரைக்கும் எதுக்கும் கவல படாத நானு இப்போ கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. என்னோட இட்லியயும், கொழம்பயும் பாத்து இல்ல. உலகத்துல பல பேறுக்கு ஒரு வேள சாப்ட கூட சாப்பாடு இல்லேனு நினைக்கும் போது. 

இறைவனை வேண்டி எனக்கு முன்னாடி இருக்றத சந்தோஷமா சாப்ட இப்போ நான் அப்பீட்டு ஆயிக்கறேன்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பி.கு.1. நாம மெக்.டி, KFC போன்ற கடைகளுக்கு போய், ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் கேட்டா கூட நமக்கு pack பண்ணும் போது, உள்ள போறதுல பாதி வெளில விழுது. இந்த கீழ விழறது பல பேறுக்கு முழு உணவாகவும் இருக்கலாம்
பி.கு.2. packed ஃபுட் ங்கர பேருல ஆடுல இருந்து, தக்காளி வரைக்கும், எக்ஸ்பைரி தேதி ஒன்னு போட்டு இருக்காங்க, அடுத்த நாள் அது வீணா போகுது. வேணுங்கற போது ஆட்டையும், கோழியயும் வெட்டலாமெ. நாம இப்படிப்பட்ட packed ஐடங்க்ள தவிர்க்கலாமே
பி.கு.3. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி சொல்லிட்டு போயிருக்காரு. நாம ஜகத்த அழிக்க வேணா, ஆனா, எதாச்சும் செய்யனுங்க. கண்டிப்பா எதாச்சும் செஞ்சே ஆகனுங்க.
பி.கு.4. இதெல்லாம் தப்பு, மெக்.டி யும், KFCயும் பன்றது கரெக்ட்டு தான்னு நீங்க சொன்னா, ஹி ஹி, அதுக்கு வருத்த படபோறது, நான் இல்ல, நாம.
பி.கு.5. இவ்ளோ பேசற, நீ என்னத்தடா பன்னியிருக்கேனு கேக்றீங்களா? நானும் ஒன்னும் செய்யல, அதத்தான் பி.கு.3 ல சொல்லியிருக்கேன்.
பி.கு.6. எதுவுமே பண்ண முடியலேன வாங்கற சாப்பாட்ட வேஸ்டு பண்ணாம சாப்டாலே நல்லது.
பி.கு.7. நந்து, சர்வேசன், ப்ரியா, ராமலக்ஷ்மி. இவங்களோட தமிழ் பதிப்புகள பாத்து தான் நானும் தமிழ்-ல எழுதனும்னு தோனிச்சு. இந்த முதல் பதிப்பு, அவங்களுக்கு. இத நான் அவங்கள கேட்டு போடல, தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க
பி.கு.8. படிச்சிடீங்களா? இப்போ கமெண்ட்டுங்க.