Monday, July 13, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 6

இதுவரை பயணித்தது...

ரயில் ரைன் நீர்வீழ்ச்சியை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ரைன் நீர்வீழ்ச்சியின் அழகை நாங்கள் ரசிக்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது. ரயில் கடைசி நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தது.

'சரி கடைசியா கையில எப்போ பைய வெச்சிகிட்டு இருந்தேன்னு ஞாபகம் இருக்கா?', என்றேன்.
'தெரியல டா', என்றான்.
'யூத் ஹாஸ்டல்ல இருந்து கிளம்பும் போது எடுத்துகிட்டு வந்தியா?'
'ம்ம், ஜூரிக்ல என்கிட்ட பை இருந்திச்சு'.

ரயில் மீண்டும் கிளம்பி இப்போது ரைன் நீர்வீழ்ச்சி வந்து சேர்ந்தது. ஆதி ரயிலில் இருந்த ஒர் காவலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
'மச்சி அப்போ நாம ரைன் பால்ஸ் பாக்க முடியாதா?', என்று கேட்டான் கார்த்தி.
'ங்கொய்யால, ஊருக்குப் போய் சேருவோமான்னே தெரியல ரைன் பால்ஸ் ரொம்ப முக்கியம்', என்றேன்
'ஜுரிக்ல ட்ரெய்ன் ஏறும் போது கூட பை இருந்திச்சு டா, ஷூர். ஆனா விண்டர்தூர்ல இருந்த போது நம்ம சாப்பாட்டு மூட்டையெல்லாம் எடுத்துகிட்டு இறங்கினேன். பை எடுத்துக்கிட்ட மாதிரி ஞாபகம் இல்லே டா', என்றான் ஆதி.
'அப்போ நாம ஏறின ஜுரிக் டூ விண்டர்தூர் ட்ரெயின் இப்போ எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சு அதுல தேடலாம்', என்றேன்.

ஒரு பத்து நிமிடத்தில் ரயில் விண்டர்தூர் வந்து சேர்ந்தது. எங்களிடம் பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான ரசீது இருந்ததால், நாங்கள் எந்த ரயிலில் சென்றோம் என்பதற்கான குறியீடுகள் அதில் இருந்தது. அதை டிக்கெட் கவுண்டரில் காண்பித்த இப்போது அந்த ரயில் எங்கு இருக்கிறது என்பதைக் கேட்டோம். அந்த ரயில் இன்னுமொரு நாற்பத்தைந்து நிமிடங்களில் விண்டர்தூர் வந்து சேரும் என்பதைத் தெரிந்து கொண்டோம்.

சரி இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் இருக்கிறதே என்று நாங்கள் விண்டர்தூரைச் சுற்றலாம் என்று எண்ணி ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஒரு அரை மணி நேரம் அருகிலிருந்த தோட்டங்களையும், சில சாலைகளையும் சுற்றினோம். விண்டர்தூரில் தான் நாங்கள் முதன் முறையாக ட்ராம் மற்றும் பஸ்சின் கலவையைப் பார்த்தோம். அதாவது பேருந்து போன்ற உடலமைப்பு இருந்தது. டையர்கள் உட்பட, ஆனால், மேலே மின்சாரக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தான் செயல் படுகிறது. கீழே தண்டவாளங்களும் இல்லை.




பின்னர் மீண்டும் நாங்கள் விண்டர்தூரில் எங்களது ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் முதல் வகுப்பு ஏறினோம் என்பதால், ரயிலில் உள்ள முதல் வகுப்புகளில் நாங்கள் மூவர் ஏறி, பையைத் தேடுவது என்று முடிவு செய்தோம். அதனால் ரயில் வந்தவுடன் மூவரும், பிரிந்து முதல் வகுப்புகளில் ஏற வேண்டும் என முடிவு செய்தோம்.அங்கே ஒரு ரயில் அதிகாரி நாங்கள் முன்னும் பின்னும் நடப்பதைப் பார்த்து எங்களிடம் வந்தார்.
'Are you guys ok?', என்றார்.
நாங்கள் நடந்தவற்றை எல்லாம் சொன்னோம்.
'Don't worry', என்று சொல்லி விட்டு, அவருடைய அலைப்பேசி எடுத்து யாருடனோ தொடர்பு கொண்டு, ஒரு சில நிமிடங்கள் கழித்து, 'the train is approaching this station in few minutes', என்றார்.
'Thanks', என்றான் ஆதி.
'Where in India are you from?', என்றார்.
இவருக்கு எப்படி இது தெரிந்ததென்று எங்களுக்குப் புரியவில்லை. 'From Chennai', என்றேன்.
'Oh Chennai, it was Madras once', என்றதும் எங்களுக்கு ஆச்சர்யம்.
'How do you know this?', கார்த்தி கேட்டான்.
'I had been in India for 7 to 8 years', என்றார்.
'Where in India?'
'From east to west and Kashmir to Kanyakumari, I have travelled almost every place in India. Its a nice country'

உண்மையில் பெருமையாக இருந்தாலும், இது வரை நாங்கள் லண்டன் என்று சொன்னதை நினைத்து சிறிது வெட்கமாகத் தான் இருந்தது.

'I have asked the guard in the train to look for the bags in the first class compartments, and apparently there is one, but not sure if that is your bag', என்றார்.
அவருடன் நாங்கள் இருந்தது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, இருப்பினும் அவர் மீது எங்களுக்கு அளவு கடந்த மரியாதை வந்தது. இரண்டொரு நிமிடங்களில் ரயில் வந்தது. அவர் சொன்ன ரயில் பெட்டியில் நான் ஏறினேன். கார்த்தியும் ஆதியும் வேறொரு பெட்டியில் ஏறினார்கள். கண்ணுக்கெதிரே இருந்தது அவனது பை.



அவருக்கு நன்றிகளைச் சொல்ல, அவரோ நேரமின்மையால் விடைபெற்றுக் கொண்டார். நாங்கள் பின்னர் மீண்டும் ரைன் நீர்வீழ்ச்சிக்குப் பயணித்தோம்.

ரைன் நீர்வீழ்ச்சி உலகிலேயே மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. (மிக உயரமானது அல்ல. நயாகரா தான் உயரமானது). அங்கு செல்ல காட்டுப் பகுதிகளில் சுமார் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். நம்முடன் எப்போதுமே ஒரு கூட்டம் இருப்பதால் பயமில்லாமல் செல்லலாம்.



தூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சியின் சத்தம் நமக்கு கேட்கிறது. அருகில் சென்றதும் நாம் பேசுவது யாருக்கும் கேட்பதில்லை.

ரைன் நதியில் ஒரு கரையிலிருந்து படகு ஏறி நாம் நீர்வீழ்ச்சியின் மையப் பகுதிக்கே செல்லலாம். படகு ஒரு கரையில் ஆரம்பித்து, இன்னொரு கரைக்குச் செல்கிறது. அங்கு பல்நாட்டு உணவகங்கள் இருக்கின்றன. அங்கிருந்து வேறொரு படகில் ஏறி நாம் நீர்சீழ்ச்சியின் மையப் பகுதிக்குச் செல்லலாம்.



நாங்கள் முதல் படகில் ஏறி மற்றொரு கரைக்குச் சென்றோம். போகும் போது ஏதோ ஒரு கடலில் போவது போல் ஒரு வியப்பு. நம்மைச் சுற்றி முழுவதும் தண்ணீர், ஆழம் தெரியவில்லை. மீண்கள் தெரிந்தன. ஒரு பத்து நிமிடங்களில் மற்றொரு கரைக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் போகும் போது மணி சுமார் பன்னிரெண்டு இருந்ததால், நாங்கள் அங்கே இருக்கும் உணவகத்தில் ஏதோ கேட்க, அதைக் கஷ்டப்பட்டு முடித்தோம்.

பின்னர் அங்கிருந்து இன்னொரு படகில் ஏறி நீர்வீழ்ச்சியின் மையப் பகுதிக்குச் சென்றோம். அதன் அருகே செல்லும் போதே நம் மீது சாரல் அடிக்கிறது. குழந்தைகளுடன் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பார்க்க வேண்டிய இடம். இனி படங்கள்.








ரைன் நீர்வீழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்று மாலை நாங்கள் விமான நிலையத்திற்குப் போக வேண்டும். நேரம் இருந்ததால் நாங்கள் ஜூரிக் நகரம் சுற்றிப் பார்த்தோம். ஷாப்பிங் செய்வதற்கான மிகச் சிறந்த இடம். ஜுரிக் சின்ன நகரமாக இருந்தாலும் எங்கும் அழகாகவே இருக்கிறது.



சுவிஸில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி சொல்லிவிட்டேன். வாங்க வேண்டியவை சில இருக்கிறது.
சுவிஸில் பிரபலமானது
1) சுவிஸ் கத்தி

2) குக்கூ கடிகாரம்.


எங்களது ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு, விமான நிலையத்திற்குச் சென்றோம். சிறிது தாமதமாகச் சென்றதால் எங்கள் மூவருக்கும் ஒரே வரிசையில் இடம் கிடைக்கவில்லை. மற்ற இருவர் எங்கு அமர்ந்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. நான் ஏதோ கிடைத்த இடத்தில் அமர்ந்துக் கொண்டேன். எனது அருகில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இருந்தார். விமானம் பாதி வழியில் பறந்து கொண்டிருந்தது.
'Where are you from? Swiss or England?', என்று நான் கேட்டேன்.
'I am from England, London. And you?'
'India'

பயணம் முடிந்தது.

13 comments:

Manu said...

//'I am from England, London. And you?'
'India'//

This is how a true Indian should do...

Good Narration...Very much interesting...Expecting more more post like this since we will enjoy those beauties by reading and watching ur photos. The photos r really cool...

Appreciate ur effort...

மணிகண்டன் said...

பயணம் அருமை ட்ரூத்.

உண்மையாவே ரைன் நீர்வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மாதிரி இருந்ததா ?

mazhai said...

ஒரே மூச்சில ஆறு பகுதியையும் படிச்சு முடிச்சாச்சு. நல்லா எழுதியிருக்கீங்க.

ஏதோ நாங்களும் உங்க கூடவே பயணம் செய்த உணர்வு.

பாராட்டுக்கள்.

Truth said...

நன்றி மனு.

நன்றி மணிகண்டன். ரைன் நீர்வீழ்ச்சி, உயரமாக இல்லை. ஆனால், விரிந்து, பரந்து இருந்தது. உண்மை தானே?

வருகைக்கும், கமெண்டிற்கும் நன்றி மழை

மணிகண்டன் said...

I think i went during off season :)- Just looked like a river flowing through some big stones. But if i see your snaps, it looks pretty good.

Suresh M said...

Good narration. Post more.

Truth said...

நன்றி மணி.

வருகைக்கும் பின்னூட்த்திற்கும் நன்றி சுரேஷ்.

Anu said...

Excellent narration and was interesting to read!

Truth said...

Thanks Anu

sujatha said...

Hello Truth..
No words to express my appreciation.

Superb.

Photos - Excellent.
Last two lines....Perfect Indian.

Truth said...

நன்றி அக்கா... :)

sri said...

நானும் சுவிஸ் போயிடு வந்த மாதிரி இருக்கு........ நன்றி உங்கள் உரைநடைக்கும் இங்கே எழுதியதருகும்...............

Truth said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்ரீ.