Thursday, July 16, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 2

பாகம் ஒன்று

நானும் என்னவளும் எங்களின் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றோம். இருட்டால் துடைக்கப் பட்டிருந்தது அந்த அறை. வெளியே லாபியில் இருந்த விளக்கின் வெளிச்சம் முடிந்த வரை அறையின் உள்ளே எட்டிப் பார்க்க முயன்று நான்கு அடிக்கு மேல் உள்ளே செல்ல முடியாமல் தோற்றுப் போனதை ஒப்புக்கொண்டது. எனது வலது கையை சுவரின் மீது சற்றே தேய்க்க, இதோ கிடைத்துவிட்டது. விளக்குகள் போடப் பட்டது. அறை பிரகாசமானது. உள்ளே சென்று பூட்டினேன்.

உண்மையில் இந்த அறையை மட்டும் அடைக்காமல் இருந்திருந்தால் ஹெவன் ரிசார்ட்டுக்கு லாபம் அதிகரித்திருக்கும். அறையின் உள்ளே இருக்கும் விளக்குகள் ஆகட்டும், மெத்தை ஆகட்டும், அனைத்துமே புத்தம் புதுசாகத் தான் இருந்தது. ஜன்னலின் ஓரங்களும், தரையும் மட்டுமே ஏனோ பல நாட்கள் உபயோகிக்காமல் போனதால் அழுக்கு படிந்து கிடந்தது. அருகிலிருந்த அலமாரியைத் திறந்ததும் அறைக் கதவு தட்டப்பட்டது.

'டொக்... டொக்... டொக்...', என்றது கதவு.
'கதவத் திற டீ', என்றேன்.
'என்னால முடியாது செம்ம டையர்ட்', என்றாள்.
'உண்மையாவா சொல்றே?'
'ம்ம்ம்'
'அப்போ சரி, உடனே தூங்கிடுவே போல இருக்கு'
'ஏய்ய்ய், ச்சீ', என்றாள்.

'டொக் டொக் டொக்', இம்முறை இடைவெளி குறைந்தது.
நான் உடனே கதவைத் திறந்தேன். அங்கு சுமார் மூன்றடிக்கும் கம்மியாக ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
'சார், நான் க்ளீனர் பாய். ரூம க்ளீன் பண்ணனும்னு சொன்னாங்க', என்றான்
'சரி வாப்பா', என்றேன்.

பத்தே நிமிடத்தில் அவன் அறையைச் சுத்தம் செய்துவிட்டான். ஜன்னல்களின் இடுக்களிலிருந்து தரையின் ஓரங்கள் வரைக்கும் அனைத்தும் இப்போது சுத்தமாக இருந்தது.

'ஹம்ம் இப்போவே டைம் பத்தாகுது', என்றேன்.
'ரெண்டே நிமிஷம்'
'என்ன மேகி பண்ணப் போறியா?'
'ஆமா டா, அதுக்கு தான வந்திருக்கோம்', என்று சொல்லிவிட்டு முகத்தைக் கழுவச் சென்றாள்.
நான் எனது ஆடையை மாற்றிக் கொண்டு அவள் பின்னால் நின்று கொண்டேன்.
'என்ன ரெடியா?'
'இரு டா, ரொம்ப தான் அவசரம் உனக்கு'
'எனக்கு ஒன்னும் இல்லே, நீ தான் டையர்டா இருக்கியே, அதுக்கு தான் சொன்னே', என்றேன்.
'ச்சீப் போ', என்றாள், வெட்கத்துடன். ஏனோ தெரியவில்லை இந்தப் பழைய வெட்கம் மட்டும் என்றும் புதிதாக இருக்கிறது.
இரண்டு நிமிடங்கள் ஆனதும் அவளைப் பின்னாலிருந்து தூக்கி மெத்தைக்குக் கடத்தினேன்.

'என்ன செய்யப் போறீங்க?' என்று வினவினாள் ஏதும் தெரியாதவளைப் போல்.
'கவிதை எழுதலாம்னு' என்றேன் நான்.
'ஒ, அவ்ளோ சந்தோஷமா?' என்று கேட்டவள், என் பதிலுக்கும் காத்திராமல் 'என்ன தலைப்பு?' என்று புருவங்களை உயர்த்தியபடி கேட்டாள்.
'நாணம்'.

என்னை ஒரு நிமிடம் விழியால் உள்வாங்கிக் கொண்டு, 'நாணம் - பெண்ணின் தேவையற்ற ஆடை!' என்று கூறி, தன் காந்தப் பார்வையை நிறுத்தி, கண்களைச் சிமிட்டி, சிரித்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் என் குட்டிப் புயல். அய்யோ! தொலைந்தே போனேன் நான். பாதியைத் தொலைத்து, வெற்று மீதியுடன் வாழ்வது சாத்தியமற்றதால், தொலைந்த அவளிடமே சென்று, என்னைத் தேடி, மீண்டும் அவளிடம் முழுதாய்த் தொலைவதென்று முடிவு செய்தேன். அப்பொழுது தான் உணர்நதேன், எனக்கான, என் பண்டத்தை நான் ருசித்து நாட்கள் பலவானதென்று!

வெளியே சென்றவளைக் கரம் பற்றி இழுத்து, காற்றும் நுழையாத வண்ணம் அவளை என்னருகில் வளைத்தேன். என் துடியிடையாளைக் கரங்களில் ஏந்தி, பஞ்சணையில் கிடத்தினேன்! ஜென்ம சாபல்யம் அடைந்ததாய்த் தோன்றியிருக்கும் அந்தப் பஞ்சணைக்கு. அவளோ, ஏதும் பேசாமல், எனது லீலைகளை ஆவலாய் எதிர்நோக்கியவளாய் இருந்தாள். அவளின் கழுத்தில் அழுத்திய என் உதடுகளின் ஸ்பரிசம் தாங்க முடியாதவளாய்ச் சிதறிப் போனாள். சிதறியவளைச் சேர்த்து எடுக்கும் எண்ணம் கொண்டு, என் விழிகளோடு மட்டுமே விளையாட அறிந்திருந்த அவளின் உணர்வுகளோடு என் திருவிளையாடலைத் துவங்கினேன்.

'பூவுக்குள் ஒரு பூகம்பம் படைக்கணும், உதவி தேவை' என்றேன் காற்றில் அசைந்தாடிய அவளின் கூந்தலைக் கோதியவாறே.
'ஹ்ம்ம், என்ன பா' என்றாள்.
'பாலுக்கும் உனக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமாடீ உனக்கு?' என்றேன்.
'அது என்ன புதுசா ஒரு ஒற்றுமை?' என்றென்னை இருகியவளின் கண் பார்த்துச் சொன்னேன், 'இரண்டிற்கும் ஆடை அழகில்லை' என்று.
'ச்சீ', என்று பொய்யாய்ச் சினுங்கி, என்னைத் தள்ள முயன்றவளின் வளைக்கரத்தில் அழுந்த முத்தமிட்டேன்.

ஒவ்வொரு முறை மீட்டும் போதும் இசை விருந்தளிக்கும் இன்னிசை யாழ் அவள்; இன்னிசையாளும் அவள். பூவில் மதுவருந்தும் வண்டினத்தவன் இல்லை நான். மலரிதழ்களைக் கசக்கி அதிலிருந்து வாசனைத் திரவியம் கண்டெடுக்கும் மனு குலத்தவன். மெல்லிய மலரொத்த அவளிடமிருந்தும் திரவியம் தேடும் படலம் துவங்கியது.

மீண்டும் கதவு 'டொக் டொக் டொக்', என்றது.
இம்முறை கதவைத் திறக்கவே கூடாது என்று நினைத்தேன்.
கதவு பலமாகத் தட்டப்பட்டது.
'நான் போய் பார்கறேன்', என்றேன்.
'ஹே ச்சீ இரு, நான் உள்ள போறேன்', என்று சொல்லி, தனது ஆடைகளைத் தேடி எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

நான் கதவைத் திறந்தேன். அதே மூன்றடி க்ளீனர் நின்று கொண்டிருந்தான்.
'என்ன வேணும்', என்றேன்.
'ஒன்னும் இல்ல சார், எதாவது வேணுமா சார்', என்றபடி உள்ளே எட்டிப் பார்த்தான்.
'மணி பன்னண்டு ஆகுது, இப்போ ஒன்னும் வேணாம், மறுபடியும் கதவைத் தட்டாதே' என்று சொல்லி கதைவை அடைத்தேன்.
கதவு மூடும் வரை அவன் அங்கிருந்து கிளம்பியதாக எனக்குத் தெரியவில்லை.

நான் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தேன். எனது எதிரில் இருந்த ஜன்னலின் ஓரத்தில் சின்னதாய் வெடித்து அதிலிருந்து கை விரல்கள் மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது.

தேனிலவு இன்னும் தொடரும்...

4 comments:

Manu said...

தலைப்பிற்கு ஏற்ற பதிவு...

sri said...

Nalla Thamizh padichu romba nalachu, Nantri, adutha pagathirkaga kathirukkiren....

sreeja said...

Waiting for 3rd Part.

Truth said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி புன்னகை, மனு.

@ஸ்ரீ, ரொம்ப நன்றிங்க. மீண்டும் வந்து படிங்க.

@ஸ்ரீஜா, நன்றிங்க, மூன்றாவது பாகம் போட்டாச்சு, படிச்சுட்டு சொல்லுங்க.